| அசைவ உணவில்தான் திறனிருக்கிறதென்றால் இயங்குபொறிகளுக்கு (இயந்திரங்களுக்கு) புலித்திறன் என்றுதானே அளவிட வேண்டும். ஆனால் நாம் ஏன் தாவரங்களை மட்டுமே உட்கொள்ளும் குதிரைத்திறன் என்று கூறுகிறோம். - பதினாறு கவனகர் கனகசுப்புரத்தினத்தின் இந்தக் கேள்விக்கு உங்களில் யாரேனும் விடையளிக்க முடியுமா? |
செய்திகள்
|
பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்கள் விலையேற்றமும் நாட்டின் பணவீக்கமும்அரசுத்துறை நிறுவனங்கள் பலவற்றில் பெரும்பாலானவை மக்களுக்கும் மக்களின் நலனுக்குமே அரசாங்கத்தால் உருவாக்கப்படுவதாக பாராளுமன்றச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திராகாந்தி தேசியத்திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தொலைக்கல்வி வழங்குவதில் முன்மாதிரிப் பல்கலைக்கழகமாக விளங்கவே உருவாக்கப்பட்டு பாராளுமன்றச்சட்டமாக இயற்றப்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் பல மக்கள் வரிப்பணத்திலும் (சாலைவரி, வீட்டுவரி, வருமான வரி இப்படிப்பல வரிகள்) அந்நியச்செலாவணியிலுமே பல நிறுவனங்களை இயக்கி அதன் மூலம் நாட்டின் தேவைகளையும் நாட்டு மக்களின் தேவைகளையும் தீர்த்துவைக்கவே (இலாப நோக்கில் இயங்காமல்) பல அரசுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் முக்கியமான தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2010 21:29) |
||
|