|
பனித்துளிகள் தங்களை அன்புடன் வரவேற்கின்றன
அறிவோம் தமிழ்மருத்துவத்தின் அருமையை (17) -பிணிபல தீர்க்கும் வேம்புஅறிவோம் தமிழ்மருத்துவத்தின் அருமையை (17) -பிணிபல தீர்க்கும் வேம்பு மாரியம்மன் கோவில்களில் தெய்வ வழிபாட்டுக்குகந்ததாகவும் தெய்வீகத் திறன் பொருந்தியதாகக் கருதப்படும் வேம்பு சக்தியின் உருவமாக வணங்கப்படுகிறது. சிவன் உருவமாகக் கருதப்படும் அரசமரத்துடன் இணைத்து வளர்த்து அன்னை தந்தையாக இரு மரங்களுக்கடியிலும் வீற்றிருக்கும் வினாயகப்பெருமானை 9 முறை வலம்வந்து வணங்கினால் குழந்தைபேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2009 14:37) அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (16) - மருந்தில் உயர்ந்த சுக்குஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (16) - மருந்தில் உயர்ந்த சுக்கு சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2009 20:21) |
திரையிசைப் பாடல்களில் தமிழ்ச்சுவை (6) - புஞ்சையுண்டு நஞ்சையுண்டுஏற்கனவே நமது பாடல் வரிசைகளில் உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் இசைஞானியின் இசையில் இடம்பெற்ற பொன் மகாலிங்கம் இயற்றிய உன்னால் முடியும் தம்பி என்ற பாடலின் தமிழ்ச்சுவையைப் பார்த்தோம். உண்மையில் சொற்கள் மட்டுமல்ல, மெட்டிலும் கருநாடக இசைச்செல்வர்களைத் திரும்பிப்பார்க்கவைத்த பாடல் அப்படத்தில் இடம்பெற்ற புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்பதாகும். இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2009 11:47) அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (15) - மணந்தரும் சாதி மல்லிஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை - மணந்தரும் சாதி மல்லி மூச்சுக் காற்று உள்ளிழுக்கப்படும்போது காற்றில் கலந்திருக்கும் வாசத்தை பிரித்தறியும் உணர்வு நரம்பினால் நாம் மணத்தை உணர்கிறோம். நாற்றமடிக்கும் அழுகல் வாசனையை உடைய மணத்தை நுகர்வதால் உடலும் குருதி நாளங்களும் அசுத்தமடையும். நலம்கெடும். மனத்தூய்மையும் கெடும். மனத்தூய்மை கெட்டுப்போவதால் பிறரைப் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கும். கோபம், கவலை, மந்தப்புத்தி, வஞ்சனை ஆகிய எண்ணங்களும் மேலெழும். ஊழிக்காற்றடித்தால் நச்சுக்காய்ச்சல், காலரா, வயிற்றுப்போக்கு ஊரெங்கும் பரவுகிறது.
|
















