|
பனித்துளிகள் தங்களை அன்புடன் வரவேற்கின்றன
தமிழில் இதுவரை வந்திராத ஒரு மோசமான திரைப்படம்காசை வாங்கிக் கொண்டு தன்னையும் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் கெட்ட வார்த்தைகளால் திட்டினால்கூட இந்த தணிக்கைக் குழுவும் அதற்குத் துணைநிற்பவர்களும் படத்திற்கு சான்றளித்து படம்பார்க்க அனுமதிப்பார்கள் என்று தெரியும் தற்போது வெளிவந்திருக்கும் "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படத்தைப் பார்ப்பவர்க்கு. அத்தனையும் வக்கிரம். வக்கிரத்தைத் தவிர வேறொன்றுமில்லை எனலாம். செல்வராகவன் என்ற இயக்குனருக்கு, இதற்காகத் தூக்கு தண்டனை அளித்தாலும் அதில் தவறில்லை என்று தோன்றுகிறது.
கருத்துரைக்கவும் (2 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 18 சனவரி 2010 08:30) மழைக் காகிதங்கள் மக்கிப் போக!பாலிதீன் பைகள் என்றழைக்கப்படும் மழைக்காகிதங்கள், அதனால் புவிமாசுபடுதல் மற்றும் பல கொடுமையான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம்; பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாள்தோறும் கோடிக்கணக்கில் பல பாலித்தீன் பைகள் சாலையிலும், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளிலும் வீசி எறியப்பட்டு அதன் மூலம் புவியானது கண்டபடி மாசுபட்டுக்கொண்டுதானிருக்கிறது. பாலிதீன் பைகளுக்கான அரசின் சட்டங்கள், கெடுபிடிகளும் அதனுடன் சேர்ந்து காற்றில் பறக்கின்றன என்பதையும் நாம் அறிவோம்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 28 திசம்பர் 2009 11:21) |
அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (20) - குளிர்ச்சிதரும் ஆவாரைஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (20) - குளிர்ச்சிதரும் ஆவாரை "ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?" என்பது சித்தர் வாக்கியம். தமிழகமெங்கும் தரிசு நிலங்களில் நன்கு வளர்ந்து மஞ்சள் நிறப்பூக்கள் பூத்து அழகாகக் காட்சிதரும் ஆவாரை தங்கச் சத்தும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. நாடி நரம்புகளில் தளர்ச்சியைப் போக்கி உடலை வன்மையாக்கும். மேகவெட்டையையும் உடலின் உள்வெப்பத்தையும் தணித்து, குளிர்ச்சி தரும். உடலைத் தங்க நிறமாக்கும் உடல்வறட்சியையும் சோர்வையும் நீக்கி வலிமைதரும்.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 07 சனவரி 2010 08:09) அறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (19) - இதயம் காக்கும் மிளகுபத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (வியாழக்கிழமை, 17 திசம்பர் 2009 07:40) |















