|
பனித்துளிகள் தங்களை அன்புடன் வரவேற்கின்றன
அகரம் என்றொரு ஆரம்பம்நேற்று மறைந்தது விடுதலை நாள்
இவ்வளவு நாளாக நம்மை ஆண்ட அரசியலாளர்கள் செய்யாததை இந்த அகரம் செய்துமுடிக்கட்டும். நம்மால் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட முடிந்தால் அதுவே ஒரு பெரும் பேறுதான். நம் நாட்டில் எங்கோ ஒரு மூலையில் நாளைய அப்துல் கலாம்கள், நாளைய அண்ணாதுரைகள், நாளைய சமூகத்தின் துரு ஏறாத தூண்கள் தூங்கிப் போகாமல் தட்டி எழுப்புவது என்னவோ நமது கடமையாக நமக்குத்தோன்றுகிறது. அகரம் இணையதளம்: http://www.agaram.in
கருத்துரைக்கவும் (0 கருத்துரைகள்)
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 16 ஆகச்டு 2010 14:44) செம்மொழி மாநாடு கண்டோம், இனியென்ன நாம் காண வேண்டும்?திருவிழாக்கள் தமிழர்களின் ஏடறிந்த வரலாற்றுக் காலந்தொட்டு வளர்ந்து வருபவை. தமிழர் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தவை. சமூகத்தில் பன்முகத்தன்மைகள், பண்பாட்டு எச்சங்கள் போன்றவை இவற்றுள் பொதிந்திருப்பதை சமூக ஆர்வலர்கள் விரித்துரைப்பர். அண்மையில் கோவையில் நடந்து முடிந்த உலகத்தமிழ் மாநாடும் ஒரு பெரும் திருவிழாதான். கோவை இதுவரை கண்டிராத பெரும் திருவிழாதான். கோவை இதுவரை கண்டிராத பெரும் விழா. கொங்கு நாடு, பழந்தமிழர்கள் ரோமாபுரியுடன் கொண்டிருந்த கடல் வாணிபத் தொடர்பை விளக்கும் தரவுகளைப் புதை பொருளாகக் கொண்ட செந்தமிழ் பரப்பாகும். இந்த நாட்டை ஊடருத்துச்சென்ற இராசராசன் பெருவழியில் உள்ள சித்தநாயக்கன் பாளையம் அடியேனது பிறப்பகம். இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக இடையின்றி நடைபெற்றுவரும் மாகாளியம்மன் தேர் திருவிழாவின் வேறோர் பரிமாணமாகவே செம்மொழித்திருவிழா இருந்தது. நாற்பது ஆண்டுகளுக்குமுன் 1970 களின் நினைவுகளோடு மாநாட்டு மக்கள் திரளில் கலந்தலைந்தேன்.
|
மனிதவள மேலாளரின் (HR Manager) பொறுப்புக்கள்மனிதவள மேலாளர் (HR Manager) எனப்படும் பணியின் சிறப்புக்கள் குறித்தும் அப்பணியாற்றுபவர்களின் பொறுப்புக்கள் குறித்தும் இந்தப் பகுதியில் பார்க்கலாம். இந்தப்பணி மிக்கச்சாதாரணமானதல்ல. ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் இந்தப்பொறுப்புதான் மிகமுதன்மையான காரணமாகத் திகழ்கிறது. தன்னுடன் மற்றும் தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடமிருந்து சிறப்பான பண்புகளைப் பிரித்தறிந்து நிறுவனத்தின் நோக்கங்களுக்கு, அதன் பயணப்பாதைக்குத் தேவையானதாக சரியான நேரத்தில், சரியான இடத்தில் பயன்படுத்த திட்டமிடல் வேண்டும். மேல்நிலை அலுவலர்களுக்கும், நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக அமையவேண்டிய ஒரு இன்றியமையாத பொறுப்பு இவர்களுடையதாகும். கீழ்க்காணும் பொறுப்புக்கள் மனிதவள மேலாளருடையதாகும்,
உறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி! (1)உறவுகளைத் தன்வசம் வைத்துக்கொள்வது எப்படி! (1) நம்மில் பலருக்கு வேலை நிமித்தம் உறவுகளைக் கொண்டாட நேரம் கிடைப்பதே இல்லை. பலருக்கு அலுவலக அறிவிக்கப்பட்ட நேரம் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை என்று சொன்னால், இரவு 10 மணிவரை ஏன் இன்னும் சிலர் தூக்கமெல்லாம் விழித்து பணியில் மூழ்கிக்கிடப்பர். நான் சந்தித்த மேலாளர்களில் நூற்றுக்கு ஒருவர் தவிர மற்றவர்களனைவரும் வாழ்க்கையில் முன்னேற இப்படித்தான் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டும் என்றே சொன்னார்கள். சனி ஞாயிறு கூட விட்டுவைப்பதில்லை அதையும் இந்த வேகமான உலகம் தூக்குத்தின்று துப்பிவிடுகிறது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (சனிக்கிழமை, 24 சூலை 2010 12:43) |

















